கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்றவர்களை வெட்டிய சம்பவம் - 5 பேர் கைது

வழக்கு ஒன்றில் கோவை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு சென்றவர் மற்றும் அவரது நண்பர்களை ராம்நகர் பகுதியில் ஓட ஓட துரத்தி வெட்டிய சம்பவத்தில் 5 பேரை காட்டூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


கோவை: சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(24), அருண் பிரகாஷ்(22), பிரகாஷ்(26), ஆதித்யன்(23), கார்த்தி(22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கணபதி பகுதியை சேர்ந்த நிதிஷ்குமார் என்பவர் வழக்கு ஒன்றில் கைதாகி ஜாமினில் வெளியில் வந்த நிலையில் கடந்த 12ம் தேதி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு விட்டு அவரது நண்பர்களான ரஞ்சித் மற்றும் கார்த்திக் ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் திரும்பினார்.

அப்போது அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற 9 பேர் கொண்ட கும்பல், ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கி அருகில் நிதீஷ் குமாரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

இந்தசம்பவத்தில் நிதிஷ்குமாரின் நண்பர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது. அதன் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக தற்பொழுது சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த ஜெயக்குமார்(24), அருண் பிரகாஷ்(22), பிரகாஷ்(26), ஆதித்யன்(23), கார்த்தி(22) ஆகிய ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...