பெரியாரின் பிறந்தநாள் - கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


கோவை: கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது புகைபடம் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் பெரியாரின் ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள், அரசியல் கட்சியினர் பெரியாரின் படங்களுக்கும் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பிலும் இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.



இந்நிலையில் கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.



சமூக நீதி நாளை கொண்டாடும் வண்ணம் நடைபெற்ற இந்த கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



சிவானந்த காலனியில் துவங்கிய இந்த பேரணி கிராஸ் கட் ரோடு, காந்திபுரம் பேருந்து நிலையம் வழியாக பெரியார் படிப்பகத்தில் முடிவடைந்தது.



இந்தப் பேரணியில் சமூக நீதியை குறித்தான முழக்கங்கள் எழுப்பட்டன.



மேலும் பேரணி முழுவதும் நிமிர் குழுவினரின் பறை இசை இடம்பெற்றது.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...