பெரியாரின் பிறந்தநாள் - கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் நடைபெற்ற கருஞ்சட்டை பேரணியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


கோவை: கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அவரது புகைபடம் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்து பகுதிகளிலும் பெரியாரின் ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள், அரசியல் கட்சியினர் பெரியாரின் படங்களுக்கும் சிலைகளுக்கும் மரியாதை செலுத்தினர். தமிழக அரசின் சார்பிலும் இன்றைய தினம் சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது.



இந்நிலையில் கோவையில் அனைத்து கட்சிகள் மற்றும் முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது.



சமூக நீதி நாளை கொண்டாடும் வண்ணம் நடைபெற்ற இந்த கருஞ்சட்டை பேரணியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், மதிமுக, திராவிடர் மக்கள் இயக்கம், சிபிஐ(எம்), சிபிஐ, தமிழ் சிறுத்தைகள் கட்சி உட்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் இயக்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.



சிவானந்த காலனியில் துவங்கிய இந்த பேரணி கிராஸ் கட் ரோடு, காந்திபுரம் பேருந்து நிலையம் வழியாக பெரியார் படிப்பகத்தில் முடிவடைந்தது.



இந்தப் பேரணியில் சமூக நீதியை குறித்தான முழக்கங்கள் எழுப்பட்டன.



மேலும் பேரணி முழுவதும் நிமிர் குழுவினரின் பறை இசை இடம்பெற்றது.

Newsletter

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...