தந்தை பெரியார் பிறந்த நாள் - கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாட்டுக்கறி விருந்து

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை: தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.



தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரிய அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் படம் மற்றும் சிலைகளுக்கு பெரியாரிய அமைப்பினர், ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள் அரசியல் கட்சியினர் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் இந்நாளில் சனாதனத்தை மறுப்போம் சமத்துவத்தை ஏற்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...