தந்தை பெரியார் பிறந்த நாள் - கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மாட்டுக்கறி விருந்து

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.



கோவை: தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.



தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாள் விழா தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெரியாரிய அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் படம் மற்றும் சிலைகளுக்கு பெரியாரிய அமைப்பினர், ஆதரவாளர்கள், பெரியாரிய சிந்தனையாளர்கள் அரசியல் கட்சியினர் என பலரும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் இந்நாளில் சனாதனத்தை மறுப்போம் சமத்துவத்தை ஏற்போம் என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கு வந்த அனைவருக்கும் மாட்டுக் கறி பிரியாணி மற்றும் மாட்டுக்கறி சுக்கா வழங்கப்பட்டது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...