துடியலூரில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவிய திமுக நிர்வாகிக்கு குவியும் பாராட்டு!

துடியலூரில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் ஒரு பகுதியான அண்ணா பிறந்தநாள் விழாவில், ஏழை கல்லூரி மாணவியின் கல்லூரி படிப்பிற்கு உதவும் வகையில் அவருக்கு தேவையான பாட புத்தகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



கோவை: துடியலூர் அருகே நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் ஏழை கல்லூரி மாணவியின் படிப்பிற்கு உதவியாக பாடப்புதகங்களை திமுக நிர்வாகி தமிழ் நிதி தனது சொந்த செலவில் வழங்கினார்.



திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூரில் உள்ள திமுக மன்றத்தில் துடியலூர் பகுதி கழக திமுக சார்பில் முதல் நிகழ்வாக அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத் துவக்க விழா கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு துடியலூர் பகுதிக் கழகச் செயலாளர் அருள்குமார் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.



தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திரூருவப்படத்திற்கு ஒவ்வொருவராக மலர் தூவி மரியாதை செய்தனர்.



தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதி ஆண்டு படித்து வரும் துடியலூரை சேர்ந்த கூலி தொழிலாளிகளான துரைசாமி – சரஸ்வதி ஆகியோரின் மகளான சங்கீதாவிற்கு அவர்களது குடும்ப சூழ்நிலை கருதி திமுக இரண்டாவது வட்ட துணைசெயலாளர் தமிழ்நிதி கடந்த நான்கு ஆண்டுகளாக கல்லூரி படிப்பிற்க்கு தேவையான புத்தகங்களை வருகிறார்.

அதேபோல் இந்த ஆண்டும் அண்ணா பிறந்தநாள் விழாவில் பகுதி கழக செயலாளர் அருள்குமார் மாணவியின் தாயாரிடம் இறுதி ஆண்டிற்கான புத்தகங்களை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த சரஸ்வதி உள்ளிட்ட மகளிர் கலைஞரின் மகளிர் உரிமை கிடைத்துள்ளதால் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், வட்ட செயலாளர் சண்முகம், மாமன்ற உறுப்பினர் புஷ்பமணி, நிர்வாகிகள் ரேவதி, ராமசாமி, ஆறுச்சாமி, அருக்காணி, மாரியப்பன், நாராயணன், சோபனா, அன்பழகன், பழனிச்சாமி, சுப்பிரமணி, கோவிந்தன், செல்வராஜ், சின்னசாமி, தனபாக்கியம், வெற்றி செல்வி, சோமசுந்தரம், பிரபாகரன், கலந்து கொண்டனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...