வருவாய்த்துறை அலட்சியம் - உடுமலையில் பட்ட பகலில் கனிம வளங்கள் திருட்டு

உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் உள்ள தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் இரவு பகலாக கனிம வளங்கள் திருட்டு நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது.



திருப்பூர்: ஆதாரங்களுடன் புகார் அளித்தும் கனிம வளக்கொள்ளை உறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை செல்லும் பகுதியில் தாம்புரன் கோவில் என்ற கரடு பகுதியில் கடந்த சில தினங்களாகவே இரவு பகலாக கனிம வளங்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் தரப்பில் வருவாய்த்துறையினருக்கு தகுந்த ஆதாரங்களுடன் தகவல் தெரிவித்தாலும் வருவாய்த் துறையினர் கனிமவள கடத்தலை தடுக்க எந்த ஒரு முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

இதனால் சில தினங்களில் விவசாயிகள் ஓன்று திரண்டு கனிமவள கடத்தலுக்கு துணை போகும் வருவாய்த் துறையினரை கண்டித்து உடுமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கடந்த சில தினங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல லட்சம் மதிப்பிலான கனிம வளங்கள் திருடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...