அரசு நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு வேண்டுமென்றே நிராகரிப்பதாக பல்லடம் ஒன்றிய குழு தலைவர் மாவட்ட நிர்வாகம் மீது குற்றச்சாட்டு!

பல்லடம் ஒன்றிய குழு தலைவரான தேன்மொழி தன்னை வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகத்தினர் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு அழைக்காமல் நிராகரிப்பதாகவும், இதுதொடர்பாக திமுக தலைமைக்கு தெரிவிக்க உள்ளதாகவும் கூறினார்.



திருப்பூர்: அரசு சார்ந்த நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு வேண்டுமென்றே தன்னை நிராகரிப்பதாக, திமுகவை சேர்ந்த பல்லடம் ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி மாவட்ட நிர்வாகம் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றிய குழு தலைவராக இருப்பவர் தி.மு.க.,வை சேர்ந்த தேன்மொழி.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறியதாவது,



கடந்த சில காலங்களாக அரசு விழாக்கள், நிகழ்ச்சிகள் எதற்குமே என்னை அழைப்பதில்லை. நான் பெண் என்பது காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று தெரியவில்லை.

சமீபத்தில் அமைச்சர் கயல்விழி கூட இதே போன்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார். இன்று நடந்த மகளிர் உரிமை திட்ட துவக்க விழாவுக்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆளுங்கட்சி என்பதுடன், ஒன்றிய குழு தலைவராக உள்ள எனக்கு அரசு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு கொடுக்காதது வேதனை அளிக்கிறது.

இது தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் ஆகியவரிடம் கேட்டதற்கு பதில் கூறாமல் சென்று விட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் இருந்தும் சரியான பதில் இல்லை. மாவட்ட அமைச்சர் என்ற முறையில், அமைச்சர் சுவாமிநாதனும் இது குறித்து கண்டு கொள்வதில்லை. இது தொடர்பாக, திமுக., தலைமைக்கு புகார் அளிக்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



முன்னதாக, கலெக்டர், நேர்முக உதவியாளர் மற்றும் திட்ட இயக்குநர் ஆகியோரை, தேன்மொழி மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால், மூவருமே அவரது அழைப்பை ஏற்கவில்லை எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...