தாராபுரம் அருகே தெரு நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்த சோகம்!

தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியில் வசிக்கும் ஹக்கீம் மற்றும் ஆதிதா தம்பதிக்கு சொந்தமான 20 ஆடுகள் கட்டப்பட்டிருந்த பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்த நிலையில் 2 ஆடுகள் படுகாயமடைந்துள்ளன.


திருப்பூர்: தாராபுரம் அடுத்த டி.காளிபாளையம் பகுதியில் பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து குதறியதில் 3 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.காளிபாளையம் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் சாலையில் செல்வோரை துரத்தி கடிப்பதும் தெருவில் செல்லும் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகளை கடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த நிலையில், காளிபாளையத்தை சேர்ந்த ஹக்கீம் என்பவர் அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆதிதா, 20 ஆடுகளை வளர்த்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்ப செலவுகளை செய்து வந்தார்.

வழக்கம் போல் நேற்று காலையில் ஆடுகளை காட்டில் மேய்த்த பின்பு இரவு வீட்டிற்கு அருகில் உள்ள பட்டியில் 20 ஆடுகளையும் அடைத்து வைத்துள்ளனர். இரவு ஒரு மணிக்கு ஆடுகளின் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹக்கீம் உடனடியாக பட்டியை சென்று பார்த்த போது அங்கு 10க்கும் மேற்பட்ட நாய்கள் பட்டிக்குள் புகுந்து ஆடுகளை கடித்துக் கொண்டிருந்தன.



நாய்களை விரட்டியடித்த பின்னர், ஆடுகளை பார்த்த போது நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் இறந்து கிடந்துள்ளன. மேலும் இரண்டு ஆடுகள் படுகாயம் அடைந்துள்ளன.

இந்த சம்பவம் குறித்து ஆதிதா கூறுகையில், தாராபுரம் குறிப்பாக கொளத்துப்பாளையம் வட்டார பகுதியில் 50க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. இவை பெரும்பாலும் ஆடுகளை குறி வைத்து இரவு நேரங்களில் பட்டியில் புகுந்து வேட்டையாடுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஆடுகளை நம்பி பிழைப்பு நடத்தும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே கொளத்துப்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் தெரு நாய்களை பிடிக்கவோ அல்லது சுட்டு தள்ளவோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கோரிக்கையை அப்பகுதி பொதுமக்களும் வலியுறுத்தினர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...