கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் - கோவை எல்லை பகுதியில் இரவு நேரத்திலும் சோதனை தீவிரம்!

கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவையில் கேரள எல்லைப் பகுதியான வாளையாறு சோதனை சாவடியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. காலை நேரங்கள் மட்டுமின்றி இரவு நேரத்திலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.


கோவை: கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு தாய் மற்றும் குழந்தைகள் பாதித்திருப்பது சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பலர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் கேரள எல்லை பகுதியான வாளையாறு சோதனை சாவடியில், இன்று இரண்டாவது நாளாக கேரளாவில் இருந்து வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை சோதனை செய்யப்படுகிறது.

மேலும் பேருந்துகளில் வரும் மக்களும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சோதனையானது காலை நேரங்களில் மட்டுமல்லாமல் இரவு நேரங்களிலும் நடைபெற்று வருகிறது.



இரவு நேரங்களில் அவ்வழியாக வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாகனங்களில் உள்ளவர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த சோதனையில் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாமல் காவல்துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...