முறையாக சம்பளம் வழங்கக்கோரி சோமையம்பாளையத்தில் துப்புரவு பணியாளர்கள் திடீர் ஆப்பாட்டம்!

சோமையம்பாளையம் ஊராட்சியில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் முறையாக சம்பளம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமையம்பாளையம் ஊராட்சியில் 30 பேர் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நடப்பு மாதத்துக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி செயலரிடம் முறையிட்டனர். ஆனால், அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்கள் சோமையம்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை காலை 7 மணியளவில் ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது, 10 மணி வரை நீடித்தது.

அப்போது மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும், வேலை செய்ய உபகரணங்கள் அளிக்க வேண்டும். தூய்மை பணியாளர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும், அரசு சலுகைகள் அனைத்தும் தர வேண்டும்.

பல ஆண்டுகளாக வேலை செய்யும் தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், வங்கியில் செலுத்திய சம்பள பணத்தில் கணிசமான தொகையை திரும்ப கேட்க கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி தலைவர் ரங்கராஜ், ஊராட்சி செயலர் செழியன் மற்றும் வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்திருந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுத்து விட்டு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...