கோவை ஹட்கோ காலனியில் தனியார் நிறுவன உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையம் திறப்பு!

கோவை காந்தி மாநகர்‌, ஹட்கோ காலனியில்‌, லட்சுமி மில்ஸ்‌ நிறுவனம்‌, சக்தி சுகாஸ்‌ மற்றும்‌ பாலச்சந்தர் ஆகியோர்‌ இணைந்து நமக்கு நாமே திட்டத்தில்‌ அப்ஸ்விங்ஸ்‌ எடுக்கேர் (UPSWINGS‌ EDUCARE), WOW EDUCARE ஆகிய நிறுவனங்கள்‌ மூலம்‌ மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மேயர் கல்பனா திறந்து வைத்தார்.



கோவை: கோவை காந்திமாநகர் அடுத்த ஹட்கோ காலணியில் தனியார் நிறுவனங்கள் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மையத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் திறந்து வைத்தார்.



கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.25க்கு உட்பட்ட காந்தி மா நகா்‌, ஹட்கோ காலனியில்‌, லட்சுமி மில்ஸ்‌ நிறுவனம்‌ லிமிடெட்‌, சக்தி சுகாஸ்‌ லிமிடெட்‌ மற்றும்‌ பாலச்சந்தர் ஆகியோர்‌ இணைந்து நமக்கு நாமே திட்டத்தில்‌ அப்ஸ்விங்ஸ்‌ எடுக்கேர் (UPSWINGS EDUCARE), WOW EDUCARE ஆகிய நிறுவனங்கள்‌ மூலம்‌ மறுசீரமைக்கப்பட்ட நவீன அங்கன்வாடி மைய திறப்பு விழா நடைபெற்றது.

மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ முன்னிலை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ கலந்து கொண்டு அங்கன்வாடி மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்‌.



இந்த அங்கன்வாடி மையத்தில், கல்வி விளையாட்டு உபகரணங்கள்,‌ 118க்கும்‌ மேற்பட்ட கல்வி திறன்‌ மேம்பாட்டு செயல்பாடுகள்‌, விளையாட்டு கல்வி பொம்மைகள்‌ மூலமாக தொலைக்காட்சி வாயிலாக கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



மேலும், அரட்டை திண்ணை விளையாட்டு உபகரணங்கள்‌, சமையல்தோட்டம்‌ (Kitchen Garden) மற்றும்‌ தடுப்புவேலி, குடிநீர், கழிவறை வசதிகள்‌ செய்யப்பட்டுள்ளது. 40க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ இந்த அங்கன்வாடி மையத்தில்‌ கல்வி பயின்று வருகின்றனர்.



அதனைத் தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 19க்கு உட்பட்ட மணியகாரம்பாளையம்‌, ரவீந்தரநாத் தாகூர்‌ சாலையில்‌ 24x7 குடிநீர்‌ கசிவுகளால்‌ சேதமடைந்த சாலைகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ மற்றும் மாநகராட்சி ஆணையாளா்‌ மு.பிரதாப்‌ ஆகியோர்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



அதனை உடனடியாக செப்பனிட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டனர்.



பின்னர்‌, கிழக்கு மண்டலம்‌, வார்டு எண்‌.53க்கு உட்பட்ட மசக்காளிபாளையம்‌ சாலையில்‌ நடைபெற்றுவரும்‌ 24x7 குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்தி வேகமாக செய்து முடித்து, அப்பகுதியில்‌ புதிதாக தார்‌ சாலை அமைக்கும்‌ பணியை விரைவாக தொடங்க உத்தரவிட்டார்.



ஒண்டிப்புதூர்‌ முதல்‌ இருகூர்‌ செல்லும்‌ சாலையில்‌ 24x7 குடிநீர்‌ திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப், நேரில்‌ சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, சேதமடைந்த சாலைகளை உடனடியாக செப்பனிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரவும்‌ சம்பந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்‌.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...