பேருந்து விபத்தில் கால் இழந்த மாணவி - வழக்கை விரைந்து முடிக்க கோரி ஆட்சியரிடம் மனு!

திருப்பூரில் பேருந்து விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவி பிரியா, அடுக்குமாடி குடியிருப்பில் கீழ் தளத்தில் வீடு வழங்க வேண்டும் என்றும் வழக்கை விரைந்து முடித்து இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க கோரி, ஆம்புலன்ஸ் மூலம் ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.



திருப்பூர்: பேருந்து விபத்தில் கால் இழந்த பள்ளி மாணவி பிரியா வழக்கை விரைந்து முடித்து இழப்பீட்டு தொகை வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.



திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியா ‌, தாய் இல்லாத நிலையில் தனது தந்தை மற்றும் அக்காவுடன் விரபாண்டி பகுதியில் வசித்து வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு திருப்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.

அப்போது பள்ளி செல்வதற்காக தனது வீட்டில் இருந்து அரசு பேருந்தில் வந்தவர் புஷ்பா பஸ் நிறுத்தம் பகுதியில் இறங்கி சாலையில் கடக்கும் போது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதியதில் பிரியாவின் இடது கால் முழுவதும் சிதலமடைந்தது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவிற்கு தமிழக அரசு சார்பில் மருத்துவ செலவு ஏற்கப்பட்டது. அதேபோல் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து திருப்பூர் வீரபாண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வீடு வழங்கப்பட்டது.

இதுகுறித்து மாணவி பிரியா கூறியதாவது,

அடுக்குமாடி குடியிருப்பில் எங்களுக்கு மேல் தளத்தில் வீடு வழங்கப்பட்டு உள்ளதால், சிகிச்சைக்கு செல்வதற்கும் மற்றும் அவசர தேவைக்கு சொல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊனமுற்றோருக்கான கீழ்தளத்தில் வீடு வழங்க வேண்டும்.

நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கை விரைந்து முடித்து தனக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட காலில் தற்போது மீண்டும் வலி ஏற்பட்டு வருகிறது.

தற்போது சிகிச்சை அளிப்பதற்க்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, சிகிச்சைக்கான செலவையும் அரசே ஏற்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட ப்ரியா தனது சகோதரி உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...