தாராபுரத்தில் மக்கள் நீதிமன்றம் - 5 கோடி மதிப்பில் 167 வழக்குகளுக்கு தீர்வு!

தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மீனோ தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில், 167 வழக்குகளுக்கு ரூ.5.64 கோடி மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில், 167 வழக்குகளுக்கு ரூபாய் 5 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில் தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் மீனோ தலைமையில் நடைபெற்றது.



இதில் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சார்பு நீதிபதியுமான தருமபிரபு, ஓய்வு நீதிபதி நாகராஜன், உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி மற்றும் வழக்கறிஞர்கள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில் 31 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 18 உரிமையியல் வழக்குகள், 96 குற்றவியல் சிறு வழக்குகள், மூன்று ஜீவனாம்ச வழக்கு, ஒரு குடும்ப வன்முறை வழக்கு, ஒரு காசோலை வழக்கு ஐந்து வங்கி வார கடன் வழக்கு 12 என மொத்தம் 167 வழக்குகளுக்கு ரூபாய் 5 கோடி 64 லட்சம் மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது.

இதில் 38,714 மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பயன்பெற்றனர். இதில் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு: அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்கு சேகரித்த வானதி சீனிவாசனின் குடும்பத்தார்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசனுக்காக, அவரது கணவர் சீனிவாசன் மற்றும் மகன்கள். அடுக்குமாடி குடியிருப...

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...