தாராபுரத்தில் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து - நள்ளிரவு வரை மின்சாரம் நிறுத்தம்!

தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்றிரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் நள்ளிரவு 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர மின் கம்பத்தில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்று இரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் மின்சார ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மேலும் கம்பம் உடைந்து விழும் நிலை ஏற்பட்டது.



பெரும் மின்விபத்தை தவிர்க்க மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக நேற்று நள்ளிரவு 2 மணி வரை தாராபுரம் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சிறு குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...