தாராபுரத்தில் மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து - நள்ளிரவு வரை மின்சாரம் நிறுத்தம்!

தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்றிரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதால், அப்பகுதியில் நள்ளிரவு 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.


திருப்பூர்: தாராபுரம் அருகே சாலையோர மின் கம்பத்தில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புறவழிச்சாலையில் நேற்று இரவு அதிக வேகத்துடன் வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து உடுமலை சாலை சிக்னல் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரில் உள்ள மின் கம்பத்தில் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

இதனால் மின்சார ஒயர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. மேலும் கம்பம் உடைந்து விழும் நிலை ஏற்பட்டது.



பெரும் மின்விபத்தை தவிர்க்க மின்சார வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அப்பகுதியில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் காரணமாக நேற்று நள்ளிரவு 2 மணி வரை தாராபுரம் நகரம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், சிறு குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...