28வது நாளாக தொடரும் நல்லதங்காள் விவசாயிகள் போராட்டம்!

நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருவாய்துறை மேல்முறையீட்டை திரும்ப பெற கோரி விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரி கோனேரிப்பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 28 வது நாளாக காத்திருப்பு பந்தலில் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பாக தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது, நல்லதங்காள் அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் வழக்கை மேல்முறையீடு செய்தனர். எனவே மேல்முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி, ரோடு ரோலர் முன்பாக எங்களை நசுக்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...