28வது நாளாக தொடரும் நல்லதங்காள் விவசாயிகள் போராட்டம்!

நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருவாய்துறை மேல்முறையீட்டை திரும்ப பெற கோரி விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரி கோனேரிப்பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 28 வது நாளாக காத்திருப்பு பந்தலில் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பாக தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது, நல்லதங்காள் அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் வழக்கை மேல்முறையீடு செய்தனர். எனவே மேல்முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி, ரோடு ரோலர் முன்பாக எங்களை நசுக்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...