பல இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் சேதம்: கோவையில் தமிழ்நாடு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் புகார்

கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்களின் பதவி உயர்வு தேக்கத்தை கலைந்திட வேண்டும். ஆண் சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவது போன்று பதவி உயர்வை பெண் சுகாதார செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


கோவை: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார செவிலியர் பணி இடங்களை விரைந்து விரைந்து நிரப்ப வேண்டும் என்று செவிலியர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்களின் பதவி உயர்வு தேக்கத்தை கலைந்திட வேண்டும். ஆண் சுகாதார பணியாளர்களுக்கு வழங்குவது போன்று பதவி உயர்வை பெண் சுகாதார செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன போன்ற ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அச்சங்கத்தின் மாநில தலைவர் இந்திரா, தமிழகம் முழுவதும் சுகாதார செவிலியர் பணி இடங்கள் அதிக அளவில் காலியாக இருப்பதாகவும் காலி பணியிடங்கள் காரணமாக பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் பல இடங்களில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதாகவும், கால்நடைகளை அடைக்கும் தொழுவங்கள் கூட டைல்ஸ் தரையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் மிகவும் பழுதடைந்துள்ள போதும் அரசு அதனை புணரமைப்பு செய்து தருவதில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் அணுக முடிவெடுத்துள்ளதாகவும் தங்களது பல ஆண்டு கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாமல் இருப்பதால் போராட்டங்கள் மூலம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...