உலக மின்சார வாகன தினம்..!! கோவையில் மின்சார வாகன பேரணி.! ஆட்சியர் தொடங்கி வைப்பு.!

உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


கோவை: இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றன.



உலக மின்சார வாகன தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவையில் மின்சார வாகன பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், மாநகர காவல் ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இன்று உலக மின்சார வாகன தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் மின்சார வாகனங்கள் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கண்காட்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

கோவை கொடிசியா வளாகத்திலும் மின்சார வாகன கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலக மின்சார தினமான இன்று இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகன பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.



SSEM- Society for Smart E-Mobility சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு வகையான மின்சார வாகனங்கள் இடம்பெற்றது.



இதில் பல்வேறு தனியார் மின்சார வாகன தயாரிப்பு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



தற்போதுள்ள அதிநவீன மின்சார வாகனங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் கேட்டறிந்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...