விலைவாசி உயர்வுக்கு கண்டனம்..! உடுமலையில் சிபிஐஎம் சார்பில் தபால்நிலையம் முற்றுகை.!

விலை வாசியை குறைக்க வேண்டும்,பெட்ரோல் டீசல் கேஸ் விலையை பாதியாக குறைக்க வேண்டும், அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை தலைமை தபால் நிலையத்தை சிபிஐஎம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.



திருப்பூர்: விலை வாசியை குறைக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சிபிஐஎம் கட்சியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிபிஐஎம் சார்பில் விலை வாசி உயர்வை குறைக்க வேண்டும் ,பெட்ரோல் டீசல் கேஸ்விலையை பாதியாக குறைக்க வேண்டும் அரசு துறைகளை தனியாருக்கு விற்க கூடாது பல்வேறு கோரிக்கையில் வலியுறுத்தி உடுமலை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



முற்றுகைப் போராட்டத்தின் போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன உடுமலை நகர சிபிஐஎம் நிர்வாகிகள், பால தண்டபாணி குடிமங்கலம் ஒன்றியம் சசிகலா, விஸ்வநாதன் தோழன் ராஜா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



இதே போல உடுமலை ஒன்றியம் கமிட்டி சார்பாக பள்ளபாளையம் கனரா வங்கி முன்பாக விலைவாசி உயர்வை கண்டித்து வேலையின்மைக்கு எதிராக செப்டம்பர் 7 நாடு தழுவிய மறியல் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பாலதண்டபானி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிகண்டன் உட்பட போராட்டத்தில் பெண்கள் 206 உட்பட 450 பேர் கலந்து கொண்டனர்.



இதில், 310 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...