பல்லடம் அருகே டாஸ்மாக் கடை மூடும் அறிவிப்பை பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்!

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் அந்த டாஸ்மாக் கடை செயல்படாது என தாசில்தார் அறிவித்ததை பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த செட்டிப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் இன்று முதல் செயல்படாது என தாசில்தார் அறிவித்ததை பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ள 1830 டாஸ்மாக் கடையால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் விபத்துக்கள் மட்டுமின்றி கொலை கொள்ளைக்கு காரணமாக இந்த கடை இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு முறை இந்த கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு பல்லடம் கள்ளகினர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மீண்டும் பொதுமக்கள் சார்பில் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டங்கள் அறிவிக்கப்பட்டது.



அதன்படி இன்று நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தாசில்தார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.



பேச்சுவார்த்தை முடிவில் இந்த டாஸ்மார்க் கடை இங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்த கடை இடமாற்றம் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்.



இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...