தொண்டாமுத்தூரில் வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள் - அச்சத்தில் மக்கள்!

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் இரண்டு வீடுகளை சேதப்படுத்தியது மட்டுமல்லாமல் அங்கிருந்த உணவுப் பொருட்களையும் தின்றுள்ளன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே ஊருக்குள் புகுந்த இரண்டு காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையம் கிராமம் உள்ளது. மலை அடிவாரப்பகுதியில் இந்த கிராமம் உள்ளதால் அவ்வப்போது வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று அதிகாலை யானை ஒன்று தனது குட்டியுடன் வனப்பகுதியில் இருந்து வெளியே குப்பேபாளையத்தில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கு வந்தது. அதிகாலை 3 மணியளவில் வந்த யானையை கண்டு நாய்கள் அதிக அளவில் சத்தம் போட்டது.

இதனால் சுதாரித்துக் கொண்டு மக்கள், யானை வீட்டின் ஓடுகளை உடைப்பது கண்டு வெளியே ஓடினர். இதில்,வெள்ளிங்கிரி (43) மற்றும் நஞ்சன் (60) ஆகிய இருவரது வீடுகளை யானை சேதப்படுத்தியது.

மேலும் வீட்டின் உள்ளே இருந்த கோதுமை, அரிசி போன்றவற்றை தின்றது. சுமார் 1 மணி நேரம் அங்கே குட்டியுடன் யானை நின்றது.

தொடர்ந்து, வனத்துறைக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானையை காட்டு பகுதிக்குள் விரட்டினர்.

சுமார் 10 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கடந்த 2 வருடங்களாக மின் விளக்குகள் எரிவதில்லை. இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டத்தால் வெளியில் வர முடியாமல் குழந்தைகளுடன் அவதிப்படுவதாக பழங்குடியினர் வேதனை தெரிவித்து உள்ளனர்.

மேலும் அதிகாரிகள் மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு சென்ற தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பழங்குடி மக்களுக்கு ஆறுதல் கூறி சேதம் அடைந்த வீட்டிற்கு பழுது பார்க்க நிதி உதவி கொடுத்து உடனடியாக மின் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...