கோவை கருமத்தம்பட்டி நுகர் பொருள் வாணிப கிடங்கில் அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு…

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுப் பொருட்கள் தர கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாணிபக் கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.




கோவை: ரேஷன் கடையில் ஆய்வு செய்து, மக்களிடையே பொருட்கள் உரிய நேரத்தில் தரமாக கிடைக்கிறதா என்று அமைச்சர் சக்கரபாணி கேட்டறிந்தார். இதை அடுத்து வாகராயம்பாளையத்தில் உள்ள வீடுகளுக்கும் சென்று பொருட்கள் தடையின்றி சரியான முறையில் கிடைக்கிறதா? என்று பொதுமக்களிடம் அவர் கேட்டார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் உணவுப் பொருட்கள் தர கட்டுப்பாட்டு ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இவற்றை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி வாணிபக் கிடங்கை திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வினியோக கிடங்குகளை தமிழக அரசு நவீனப்படுத்தி வருகிறது. மொத்தமுள்ள 287 நுகர்பொருள் விநியோக கிடங்குகளில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நலன் கருதி தானியங்கி எந்திரங்கள் உதவியுடன் கிடங்குகளில் பொருட்களை அனுப்ப நவீன எந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக உணவுப்பொருட்களை தர ஆய்வு செய்ய அனைத்து கிடங்குகளிலும் நவீன ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் கருமத்தம்பட்டியில் உள்ள 22 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கிலும் தர ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது .

இங்கு அமைக்கப்பட்டு வரும் தர ஆய்வுக்கூடத்தை அமைச்சர் சக்கரபாணி திடீர் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். பிறகு அங்கு இருக்கக்கூடிய உணவு பாதுகாப்பு கிடங்கை ஆய்வு செய்தார். அங்குள்ள உணவுப் பொருட்கள் வினியோகிக்கப்படும் விதத்தை கேட்டறிந்தார்.

பிறகு அமைச்சர் கூறுகையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நுகர்பொருள் வாணிபக் கிடங்குகளும் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தர ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. பொது விநியோகத் திட்டத்தை தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக உணவுப்பொருட்கள் தரமாகவும், காலதாமதமின்றியும் சரியான எடையில் பொருட்களை வழங்கவும் உணவுப்பொருள் வாணிப கிடங்குகள் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாளர் அண்ணாதுரை, கோவை மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராமச்சந்திரன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் நித்யா மனோகரன், கோவை மாவட்ட தர கட்டுப்பாட்டு மேலாளர் வனிதா, கருமத்தம்பட்டி நுகர்பொருள் பொருள் கிடங்கின் தர ஆய்வாளர் ரஞ்சித்குமார், சூலூர் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் கவிதா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி, வாகராயம்பாளையத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு செய்தார். அங்குள்ள வாகராயம்பாளையம் ரேஷன் கடையில் ஆய்வு செய்து, மக்களிடையே பொருட்கள் உரிய நேரத்தில் தரமாக கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார். இதை அடுத்து வாகராயம்பாளையத்தில் உள்ள வீடுகளுக்கும் சென்று பொருட்கள் தடையின்றி சரியான முறையில் கிடைக்கிறதா? என்பதை பொதுமக்களிடையே கேட்டறிந்தார். அப்போது கோவை கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பார்த்திபன், கோவை மாவட்ட பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...