கடனை திருப்பி செலுத்தாததால் தாராபுரத்தில் அரசு பள்ளி ஜப்தி… - மாணவர்கள், பெற்றோர்கள் அதிர்ச்சி..!!

தாராபுரத்தில் கடனை திருப்பி செலுத்தாததால், அரசு உதவிப்பெறும் பள்ளி நீதிமன்ற ஆணைப்படி ஜப்தி செய்யப்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அங்கு பயிலும் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.



திருப்பூர்: பள்ளியின் இடத்தை அடமானம் வைத்து அரசு உதவிப்பெறும் பள்ளியின் நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தினரிடம் கடன் வாங்கியுள்ளனர். அந்த கடன் நீண்ட நாட்களாகியும் அவர்கள் அடைக்காத்தால், நீதிமன்ற ஆணைப்படி, பள்ளி ஜப்தி செய்யப்பட்டுள்ளது.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையம் அருகே அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி நிர்வாகத்தினர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினர்.இதற்காக பள்ளியின் இடத்தை ஈடாக கொடுத்து இருந்தனர்.

இந்தநிலையில் நீண்ட நாட்களாகியும் கடனை திருப்பி செலுத்தாததால் தனியார் நிதி நிறுவனத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 10 வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கடனை திருப்பி செலுத்தக்கோரி ஐகோர்ட்டு பலமுறை உத்தரவிட்டும் அதனை செலுத்தாததால் பள்ளி இடத்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.



இதையடுத்து கோர்ட்டு அமீனா தாராபுரம் வந்து பள்ளியை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். இதற்கு பள்ளி நிர்வாகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் பள்ளி இடம் ஜப்தி செய்யப்பட்டது.



இதனால் அங்கு படித்து வந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் கல்வி பயில்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடனை திருப்பி செலுத்தாததால் அரசு உதவி பெறும் பள்ளி ஜப்தி செய்யப்பட்ட சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...