வால்பாறை சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் - சுற்றுலா பயணிகள் கோரிக்கை!

வால்பாறையில் உள்ள சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, வெள்ளை மலை டனல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் அதிநவீன கழிப்பறை. உடைமாற்றும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களில் கழிப்பறை மற்றும் உடை மாற்றும் அறை ஆகிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் இடங்கள் உள்ளன. இவற்றில் சோலையார் அணை,நீரார் அணை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு, வெள்ளைமலை டனல், மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை தோட்டங்கள் உள்ளன,

இதை சுற்றி பார்க்க பல்வேறு இடங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர், அதிக சுற்றுலா பயணிகள் வரும் இடமான கூழாங்கல் ஆறு பகுதியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் விளையாடி பொழுது போக்குகின்றனர்.

இந்த இடங்களில் பெண்கள் உடை மாற்றுவதற்கும் கழிப்பறை வசதி இல்லாமலும் சுற்றுலா பயணிகள் சிரமப்படுகின்றனர், கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் அதி நவீன கழிப்பறையும். உடைமாற்றும் அறையும் நகராட்சி நிர்வாகம் கட்டித் தருவதற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குழந்தைகள் பெரியவர்கள் தண்ணீரில் விளையாடுவதால் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...