விவசாயத்திற்கான தண்ணீரை மோட்டர் மூலம் உறிஞ்சி வியாபாரத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு உட்பட்ட வெள்ளியங்காடு பகுதியில் இயங்கி வரும் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு நீர், சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகளின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது.

இந்த நீரின் மூலமே அப்பகுதியில் உள்ள 2000 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயனடைந்து வருகிறது. 

தற்போது சுத்திகரிப்பு செய்யபட்டு வெளியேற்றப்படும் கழிவு நீரை சிலர் தடுப்பணை கட்டி அனுமதியில்லாமல் மின் மோட்டர் மூலம் தண்ணீரை உறிஞ்சி செங்கல் சூழைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.



எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தடுப்பணை கட்டி மின் மோட்டர் மற்றும் சோலார் ஆயில் இன்ஜின் மூலம் தண்ணீர் எடுத்து தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...