கோவை துடியலூர் பகுதியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆய்வு

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மருந்தக வளாகத்தில் உள்ள சுற்றுப்புற சூழல், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறை உட்பட அனைத்து இடங்களையும் அவர் பார்வையிட்டார்.



கோவை: தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது பற்றியும், தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.



கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு மருந்தகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மருந்தக வளாகத்தில் உள்ள சுற்றுப்புற சூழல், மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறை, மருத்துவர்களின் அறை, ஆய்வு கிடங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்ட அவர், அங்குள்ள நோயாளிகளிடம் இங்கு கிடைக்க பெரும் மருத்துவ வசதிகள் குறித்தும் தேவைப்படும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் மருத்துவர்களிடத்திலும் சில அறிவுரைகளை வழங்கினார். இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், முதலமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்காக இயங்கக்கூடிய அரசு ஈட்டுறுதி மருந்தகங்களை நேரடியாக சென்று ஆய்வு செய்து வருவதாக தெரிவித்தார்.

தொழிலாளர்களுக்கு மருத்துவ உதவிகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் எனவும், தொழிலாளர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து தொழிலாளர்களும் இங்கு வந்து மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

பல்வேறு தொழிலாளர்களுக்கு இது குறித்து தெரியாமல் வெளியில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள் என தெரிவித்த அவர், அதனை ஒழிக்கத்தான், இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

இங்கு ஆய்வுக்கிடங்கு, மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் அறை மருத்துவரின் அறைகள், போன்ற அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை நபர்கள் சிகிச்சைக்காக வருகிறார்கள் என பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து மருத்துவர்களிடத்தில், வருகின்ற நோயாளிகளிடம் இன்முகத்துடன், பேசி அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை காலதாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் என்றார்.

மருத்துவமனையைச் சுற்றியுள்ள முட்பூதர்களை அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறோம் என கூறினார். கடந்த காலங்களில் இந்த மருத்துவமனைகளை யாரும் சென்று பார்த்ததில்லை நீங்கள் அனைவரும் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்யுங்கள், தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள் தொழிலாளர்கள் நலம் முக்கியம் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் எனவும் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன் என தெரிவித்தார்.

கணினி மயமாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், அரசு ஈட்டுறுதி மருத்துவமனை நிர்வாக மருத்துவ அலுவலர் காஞ்சனா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...