தாராபுரம் அருகே சொத்து தகராறில் தம்பியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த அண்ணன் - பரபரப்பு!

தாராபுரம் அடுத்த ஓடையன்காடு பகுதியை சேர்ந்த சகோதரர்களான பழனிசாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அண்ணன் பழனிசாமி, தம்பி ஈஸ்வரமூர்த்தியை சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: தாராபுரம் அருகே சொத்து தகராறில் சொந்த தம்பியை அண்ணனே வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள கொண்டரசம்பாளையம் ஓட்டையன்காடு தோட்டத்தில் வசித்து வருபவர்கள் விவசாயி ஈஸ்வரமூர்த்தி (63) - முத்துலட்சுமி (45) தம்பதி. இவர்களுக்கு இளங்கவி என்ற மகனும், வாணிஸ்ரீ‌ என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இன்று காலை ஈஸ்வரமூர்த்தி தனது தோட்டத்தில் இருந்து கறவை மாட்டில் பால் கறந்துவிட்டு பால் காரரிடம் விற்பனை செய்வதற்காக டி.வி.எஸ் எக்ஸ்.எல் சூப்பர் பைக்கில் காலை 5 மணி அளவில் தோட்டத்திலிருந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது தோட்டத்தின் வெளியே வந்த பொழுது தனது சொந்த அண்ணன் பழனிச்சாமி (65) (சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர்) பின்னாலிருந்து இரும்பு கம்பியால் தாக்கிவிட்டு, அரிவாளால் வெட்டியுள்ளார்.



வெட்டு காயங்களுடன் கீழே விழுந்த ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே துடி துடிக்க பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தாராபுரம் போலீசார் கூறியதாவது, அண்ணன் பழனிச்சாமிக்கும், தம்பி ஈஸ்வரமூர்த்திக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அண்ணன் பழனிச்சாமி சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட சொத்து தகராறின் காரணமாக அண்ணன் தம்பியை வெட்டிக் கொலை செய்துள்ளார்.



இந்த கொலை சம்பவம் குறித்து தாராபுரம் டி.எஸ்.பி கலையரசன் தலைமையிலான தாராபுரம் போலீசார்‌ வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ஈஸ்வரமூர்த்தியின் அண்ணன் பழனிச்சாமியை தாராபுரம் போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து தகராறில் சொந்த அண்ணனே, தம்பியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...