தாராபுரம் அருகே கிராமசபை கூட்டத்தில் பங்கேற்காத ஊராட்சி தலைவர் - அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்!

சுதந்திர தினத்தை முன்னிட்டு தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்டம் தொடங்கிய 10 நிமிடத்தில் முடிக்கப்பட்டது.



திருப்பூர்: தாராபுரம் அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் பங்கேற்காததை கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் எம்.பி.சாமி காலனி பூங்காவில் நடைபெற்றது. கூட்டம் நடைபெறும் இடத்திற்கு காலை 11 மணி முதல் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து காத்திருந்தனர்.



ஆனால் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி திடீரென வரவில்லை என தெரிவித்தார். இதனால் கூட்டம் நடந்த வந்த வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி துறை கல்வித்துறை அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தனர்.

அப்போது பொதுமக்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குறைகளை தெரிவித்தனர். கடந்த இரண்டு கூட்டங்களை ஊராட்சி மன்ற தலைவர் செல்வி வேண்டும் என்று புறக்கணித்ததாக கூறி அதிகாரிகளிடம் பொதுமக்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.



ஊராட்சி மன்ற தலைவர் செல்வியை கண்டித்து பொதுமக்கள் எழுந்து நின்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் தொடங்கிய பத்து நிமிடங்களிலேயே முடிவடைந்தது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...