மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் பலி - கோவில் வளாகத்தில் உயிரை விட்டதால் பக்தர்கள் சோகம்

கோவையில் ஆடி மாதத்தையொட்டி கோவில் திருவிழாவின் போது, அன்னதானம் போடுவதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: ஆடி மாத திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பற்றி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



கோவை உக்கடம் சி.எம்.சி.காலனி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்து மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.



இந்த நிலையில் இன்று விழாவின் ஒரு பகுதியாக அன்னாதானம் நிகழ்ச்சி இன்று மதியம் நடைபெற இருந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்ற இளைஞர் ஒலிப்பெருக்கி மூலம் அன்னதானம் குறித்து தகவல் தெரிவித்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஒலிப்பெருக்கியில் அதிகப்படியான மின்சாரம் பாய்ந்ததில் கோவில் வளாகத்திலேயே தூக்கி வீசப்பட்டு மகேந்திரன் மயக்கடைந்துள்ளார்.

இதையடுத்து உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.



பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலே மகேந்திரன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

பின்னர் சம்பவம் குறித்து தகவலறிந்த உக்கடம் காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டதுடன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் உயிரிழந்த மகேந்திரன் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வருவதாகவும், அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ள சூழலில் இன்றைய அன்னதானத்திற்கு அவர் தான் சமையல் செய்ததாகவும் கூறப்படுகிறது.

அனைத்து பணிகளையும் முன் நின்று செய்த இளைஞர் கோவில் வளாகத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...