திரை உலகில் 64 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நடிகர் கமலஹாசன் - கோவையில் போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்

திரையுலகில் நடிகர் கமலஹாசன் 64வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி, கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. களத்தூர் கண்ணம்மா முதல் விக்ரம் படம் வரை அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.



கோவை: வாக்கு வங்கியை அதிகமாக வைத்துள்ள நடிகர் கமலஹாசனுக்கு அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பாராட்டு தெரிவித்துள்ளனர். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம் முதல் கடைசி படம் வரை போஸ்டர் அடித்து அவர்கள் அமர்களப்படுத்தியுள்ளனர்.

திரை உலகில் உலகநாயகன் என போற்றப்படும் நடிகர் கமலஹாசன், முதன்முதலில் நடத்து வெளியான திரைப்படம் களத்தூர் கண்ணம்மா. இந்த திரைப்படம் 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியானது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல்வேறு படங்களை கடந்து கதாநாயகனாக பல்வேறு வெற்றி படங்களை தந்தவர் கமலஹாசன்.

மேலும் இந்திய சினிமாவில் பல்வேறு புதிய புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வந்ததிலும் இவருக்கு தனி பங்கு உண்டு. நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், நடன கலைஞர், பாடகர் என பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கி வருபவர் கமலஹாசன். இந்நிலையில் களத்தூர் கண்ணம்மா திரைப்படம் வெளியாகி 63 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.



எனவே நடிகர் கமலஹாசன், திரை உலக வாழ்வில் 63 ஆண்டுகளைக் கடந்து 64 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை பாராட்டும் வகையில் கோவை 80 வது வார்டு கமலஹாசன் நற்பணி இயக்கம் சார்பில் கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் முதல் கடைசியில் வெளியான விக்ரம் படம் வரை அவரது கதாப்பாத்திரத்தின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கோவை மாநகரில் லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

Newsletter

12 மணி நேர பணிச்சுமை: திருமலையம்பாளையம் பேரூராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்

கோவை திருமலையம்பாளையம் பேரூராட்சியில் தூய்மைப்பணியாளர்களை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை என 12 மணி நேரம் பணியாற்ற வேண்ட...

கோவையில் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்த லாரி - சாலையில் சிதறிய தேங்காய்கள்

கோவை உக்கடத்தில் இருந்து கரும்புக்கடை நோக்கி தேங்காய் லோடு ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப...

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...