நடிகர் சத்தியராஜின் தாயார் மறைவு - அமைச்சர்கள் முத்துச்சாமி, இரகுபதி, சாமிநாதன் நேரில் அஞ்சலி

வயது மூப்பு காரணமாக காலமான நடிகர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, சத்தியராஜிக்கு ஆறுதல் கூறினர்.


கோவை: நடிகர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு அமைச்சர்கள் முத்துச்சாமி, இரகுபதி, சாமிநாதன் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் சத்தியராஜின் தாயார் நாதாம்பாள் (93) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது உடலுக்கு திமுக துணைப்பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று அஞ்சலி செலுத்தினர்.



இந்நிலையில், இன்று, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழக வீட்டுவசதி நகர்புற வளர்ச்சி, மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி, தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆகியோர் சத்தியராஜின் தாயார் உடலுக்கு மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து, நடிகர் சத்தியராஜிற்கு ஆறுதல் கூறினர். பொதுமக்களின் அஞ்சலிக்குப்பிறகு நாதாம்பாள் உடல் அனைவரது அஞ்சலிக்கு பிறகு ஆம்புலன்ஸ் மூலம் பாப்பநாயக்கன்பாளையம் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...