சித்தாபுதூர் மேல்நிலை பள்ளியில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி!

கோவையில் பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்தவும், தரமான கல்வியை உறுதி செய்யவும் தமிழக அரசு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி வழங்க முடிவு செய்துள்ள நிலையில், சித்தாபுதூர் மேல்நிலை பள்ளியில் மாநகராட்சி உறுப்பினர்கள் 100 பேருக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


கோவை: கோவை சித்தாபுதூர் மேல்நிலை பள்ளியில் மாநகராட்சி உறுப்பினர்கள் 100 பேருக்கும் பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன.



கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவை வலுப்படுத்தவும், அரசு பள்ளி குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கடந்த 7ஆம் தேதி முதல் வரும் 22ஆம் தேதி வரை பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்குவது என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



அதன்படி, கோவை மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளை சேர்ந்த 198 உறுப்பினர்கள் மற்றும் 33 பேரூராட்சிகளை சேர்ந்த 513 உறுப்பினர்கள் ஆகியோருக்கு மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நேற்றைய தினம் மாநகராட்சியில் உள்ள 100 கவுன்சிலர்களுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதில் மாவட்ட கருத்தாளர்களான ஆசிரியர்கள் சுபிதா, ரம்யா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பிரியா, பிரேமா ஆகியோர் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி அளித்தனர்.



அப்போது மாநகராட்சி மேயர் கல்பனா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பள்ளி மேலாண்மை பயிற்சி தர வேண்டியதன் அவசியம் குறித்து பேசினர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...