திருப்பூரில் அரசு இடத்தை திமுகவினர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆட்சியரிடம் புகார்!

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 3840 சதுர அடி பரப்பளவு உள்ள அரசு இடத்தை திமுகவினர் ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை திமுகவினர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவை சேர்ந்த குணசேகரன் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி மூன்றாவது மண்டலத்திற்குட்பட்ட நொய்யல் வீதி பகுதியில் 3840 சதுர அடி பரப்பளவு கொண்ட அரசுக்கு சொந்தமான இடம் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது திருப்பூர் பெரிய கடைவீதியில் செயல்பட்டு வரும் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இட பற்றாக்குறை காரணமாக அந்த இடத்தை பள்ளி பயன்பாட்டிற்காக பயன்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது.

தற்போது திமுக ஆட்சி அமைந்த உடன் 3840 சதுர அடி அளவுள்ள அந்த இடத்தை திமுகவினர் 24 பேரின் பெயரில் பட்டா வழங்குவதற்கு திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் பரிந்துரை செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கக்கூடிய வகையில் உள்ளது.

பள்ளி பயன்பாட்டிற்காக கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், இந்த இடத்தை அபகரிப்பதற்காக நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இந்த இடத்தை அபகரிப்பதற்காக அரசு அதிகாரிகளையோ வருவாய் துறை அதிகாரிகளையோ தரப்பினர்களாக சேர்க்காமல் தனிப்பட்ட நபர்கள் தங்களுக்கு இடையே பாகப்பிரிவினை வழக்காக தொடர்ந்து மோசடி செய்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து தீர்வு காண கூறி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையிலும் அதனை மறைத்து தற்போது 24 நபர்களுக்கு பட்டா வழங்க சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரை செய்திருப்பதன் மூலம் அந்த இடத்தை திமுக அபகரிக்க முயற்சி மேற்கொண்டு வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

இல்லை எனில் அதிமுக சார்பில் அப்பகுதி மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...