கோவையில் அழகுசாதன பொருட்கள் கடையில் திடீர் தீ விபத்து - பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு மளமளவென பரவிய நிலையில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.


கோவை: கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகுசாதன பொருட்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின.

கோவை கிராஸ்கட் ரோடு, ராஜாஜி சாலையில் உள்ள காஸ்மெட்டிக் கடை ஒன்றின் கீழ் தளத்தில் அதிகாலை 4 மணியளவில் திடிரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த உதவி மாவட்ட அலுவலர் அழகர்சாமி தலைமையிலான கோவை தெற்கு தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்களில் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.



சிறிது நேரத்தில் கடையின் முதல் தளத்திலும் தீ பரவியதால், மீண்டும் பணிகள் துரிதபடுத்தப்பட்டு சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. இச்சம்பவம் தொடர்பாக காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...