திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக பாஜக மனு!

திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும் அதனை அகற்றி தரவில்லை எனில் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ஆடி அமாவாசை அன்று படையலிட்டு திதி கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக பாஜகவினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூரில் இந்துக்களின் சுடுகாடு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை மீட்டு தராமல் உள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட போவதாக மாநகராட்சி அலுவலகத்தில் பாஜகவினர் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட செல்லாண்டி அம்மன் துறை பகுதியில் உள்ள இந்துக்களின் சுடுகாடு சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு புதைக்கப்பட்டவர்களுக்கு திதி கொடுக்கச் சொல்லும்போது முகம் சுழிக்கும் வகையிலான செயல்பாடுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பக்கத்தில் உள்ள இறைச்சி கடைக்காரர்கள் ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை அங்கேயே வெட்டுவதால் வழிபாடு செல்வதற்கு இடையூறாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.



எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் எனவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி மேயர் அலுவலகத்தில் திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

போர்க்கால அடிப்படையில் அதனை சரி செய்து தரவில்லை எனில் ஆடி அமாவாசை தினத்தன்று மாநகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மாநகராட்சி அலுவலகத்திலேயே படையலிட்டு திதி கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தனர்.



மேலும் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்வதற்கு ஏற்ற வகையில் வெண்கல அம்பேத்கர் சிலை அமைத்து தரவேண்டும் என வலியுறுத்தியும் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமாரை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...