தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்!

தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை முதல் அமராவதி ஆறு வரை ஊர்வலமாக சென்றனர்.



திருப்பூர்: தாராபுரம் அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அமராவதி ஆற்றில் ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக ஆடிப்பெருக்கு விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18-ம் தேதி பெண்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். விவசாயத்திற்கு உறுதுணையாக பொங்கி வரும் அமராவதியை வரவேற்கும் விழாவாகும்.

இதனையொட்டி, தாராபுரம் அமராவதி ஆற்றின் கரைகள் மற்றும் நீர் நிலைகளில் பெண்கள் காப்பரசி, ஆப்பிள், விலாம்பழம், சாத்துக்குடி போன்ற பழங்கள், காதோலை கருகமணி போன்ற பொருள்களை வைத்து அமராவதி தாயை வழிபட்டனர். ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனர்.

இதில், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஆடிப்பெருக்கு கொண்டாடினர்.



500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் முளைப்பாரி எடுத்து அரசமரம் சின்னக்கடை வீதி டி.எஸ் கார்னர் பெரிய கடை வீதி எண்பேட்டை 5 சாலை சந்திப்பு வழியாக அமராவதி ஆற்றை வந்து அடைந்தனர்.



அங்கு அவர்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை அமராவதி ஆற்றில் விட்டனர்.



அமராவதி ஈஸ்வரன் கோவிலில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் முருக பெருமானை பற்றி பாடி வள்ளி கும்மியாட்டம் ஆடினர்.



அதனைத் தொடர்ந்து அங்கு விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டு இருந்தது அங்கே ஏராளமான குழந்தைகள் சிறுவர்கள் பெரியவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.



முளைப்பாரி ஊர்வலத்தின் போது இளைஞர்கள் ட்ரம் செட் அடித்து ஆட்டம் பாட்டம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Newsletter

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...