கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த நபர் கல் வீச்சு தாக்குதல் - பரபரப்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் மேற்கூரை மீது ஏறிய வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் குன்றிய நபர், அங்கிருந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கீழே நடந்து சென்றவர்கள் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை ஆட்சியர் அலுவலக மேற்கூரை மீது ஏறிய வடமாநில நபர் ஒருவர், அங்கிருந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் கருவூல அலுவலகம் மேற்கூரையில் இருந்து வட மாநில நபர் ஒருவர் சட்டையின்றி, மாடியில் கிடந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு, கீழே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது எரிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



பின்னர் விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் கருவூல அலுவலகம் மேலே ஏறி அவரை மடக்கிப் பிடித்தனர்.



பின்னர் அவரது கை கால்களை கயிற்றால் கட்டி கீழே இறக்கினர்.



அந்த வட மாநில நபர் அசாம் பகுதியை சேர்ந்த விகாஷ் எனவும் மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படும் நிலையில் எவ்வாறு அவர் மேலே ஏறினார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அவர் மாடியில் இருந்து கற்களை வீசியதில் பொதுமக்கள் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Newsletter

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...