கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த நபர் கல் வீச்சு தாக்குதல் - பரபரப்பு!

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூல அலுவலகத்தின் மேற்கூரை மீது ஏறிய வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் குன்றிய நபர், அங்கிருந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கீழே நடந்து சென்றவர்கள் மீது வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை ஆட்சியர் அலுவலக மேற்கூரை மீது ஏறிய வடமாநில நபர் ஒருவர், அங்கிருந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் கருவூல அலுவலகம் மேற்கூரையில் இருந்து வட மாநில நபர் ஒருவர் சட்டையின்றி, மாடியில் கிடந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு, கீழே நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது எரிந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.



பின்னர் விரைந்து வந்த காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் கருவூல அலுவலகம் மேலே ஏறி அவரை மடக்கிப் பிடித்தனர்.



பின்னர் அவரது கை கால்களை கயிற்றால் கட்டி கீழே இறக்கினர்.



அந்த வட மாநில நபர் அசாம் பகுதியை சேர்ந்த விகாஷ் எனவும் மனவளர்ச்சி குன்றியவர் எனக் கூறப்படும் நிலையில் எவ்வாறு அவர் மேலே ஏறினார் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



அவர் மாடியில் இருந்து கற்களை வீசியதில் பொதுமக்கள் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...