கே.எஸ்.அழகிரி விரைவில் குணமடைய வேண்டி கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிறப்பு பூஜை!

சமீபத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது நிலை தடுமாறி விழுந்த காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி குணமடைய வேண்டி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.



கோவை: காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி குணமடைய வேண்டி கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தண்டுமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி இரு தினங்களுக்கு முன்பு நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு காயங்கள் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி கோவையில் பிரசித்தி பெற்ற தண்டு மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.

மாநிலத் துணைத் தலைவர் அழகு ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் பாலாபிஷேகம், உள்ளிட்ட பூஜைகள் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் வழக்கறிஞர் செந்தில் குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...