வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் - மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை!

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்தார். இன்றைய மாமன்ற கூட்டத்தின் போது, தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர்: திருப்பூரில் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.



கூட்டத்தின் துவக்கத்தில் உரையாற்றிய மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பேசியதாவது,



திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பயண்பாட்டில் இருந்தும் வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதுகுறித்து இரண்டு வார்டுகளில் கள ஆய்வு மேற்கொண்டிருந்த போது வரி ஏய்ப்பு செய்வது உறுதி செய்யப்பட்டு இருந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் வரிவிதிப்பு இல்லாமல் வரி ஏய்ப்பு செய்பவர்கள் தாங்களாகவே முன்வந்து புதிய வரியை போட்டு வரியை செலுத்த வேண்டும். இது குறித்து மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் மாதத்திற்குள் வரி ஏய்ப்பு செய்பவர்கள் புதிய வரியை போட்டு வரி செலுத்தவில்லை என்றால் செப்டம்பர் மாதம் உள்ளாட்சி விதிகளின்படி கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனை தொடர்ந்து மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து தினந்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில், அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் ஒப்பந்த பணியாளர்களை வேறு பணியிடங்களுக்கு மாற்ற கூடாது.

இவ்வாறான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வெளிநடப்பு செய்வதாக அறிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இதேபோல் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பழைய மார்க்கெட் வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பூ மார்க்கெட் கட்டப்பட்டிருந்த நிலையில் பூ வியாபாரிகள் மாநகராட்சி நிர்வாகத்தில் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட காட்டன் மார்க்கெட் வளாகத்தை விட்டு புதிய பூ மார்க்கெட்டுக்கு வராததால் மாநகராட்சிக்கு வருவாய் பாதிக்கப்படுகிறது.

இதில் யார் தலையீடு உள்ளது என்பதை மாநகராட்சி மேயர் வெளிப்படை தன்மையோடு அறிவிக்க வேண்டும் என அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு உட்பட்ட குடிநீர் வாரிய ஆய்வாளர்கள் மற்றும் குடிநீர் திறப்பாளர்கள் குடிநீர் விநியோகிக்கும் நேரத்தை மாமன்ற உறுப்பினர்களுக்கு முறையாக தெரிவிப்பதில்லை.

குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் பணிகளை முறையாக செய்வதில்லை என குற்றம் சாட்டினார் இது தொடர்பாக மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு செயல்படுவதாகவும் மாநகராட்சி கூட்டத்தில் குற்றம்சாட்டினார்.

இதனை அடுத்த கூட்டத்திற்குள் திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து மாமன்ற கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...