தமிழகத்தில் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை நபர் - அரசிடம் உரிய அனுமதி பெறப்பட்டதா என எழுந்த சர்ச்சை!

இலங்கையை சேர்ந்த பிரதாபன் தர்மலிங்கம் (47) என்ற நபர் தமிழகத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் விதமாக மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், அரசின் முக்கிய இடங்கள் வழியாக பயணிக்க உரிய அனுமதி பெறப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.



திருப்பூர்: மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் இருந்து சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வவுண்யா பகுதியை சேர்தவர் பிரதாபன் தர்மலிங்கம் (47). இலங்கை பிரஜையான இவர் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதி 3 மாத விசாவில் இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்துள்ளார்.



இந்நிலையில் இந்த மாதம் ஜூலை 23ஆம் தேதி சென்னையில் இருந்து சைக்கிளில் பயணத்தை துவங்கிய பிரதாபன் திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், சேலம் வழியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் வந்தடைந்தார்.

பின்னர் பல்லடம் அரசுக்கல்லூரியில் மரம் நட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதாபன்,



இலங்கையில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி பின்னர் பணியில் இருந்து விலகினேன், இன்னும் திருமணம் ஆகவில்லை. 38 நாட்களில் 38 மாவட்டங்களில் மரம் நடுவதன் அவசியம் குறித்து சுமார் 3000 கிலோமீட்டர் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு வருகிறேன்

தற்போது பல்லடத்தில் இருந்து சூலூர் வழியாக கோவை சென்று நீலகிரி மாவட்டத்தை அடைந்து பின்னர், அங்கிருந்து மதுரை, கன்னியாகுமரி சென்று பின்னர் சென்னை சென்று பயணத்தை முடிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கையை சேர்ந்த பிரதாபன் மேற்கொண்டிருக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம் முறையாக அனுமதியோ, தகவலோ தெரிவிக்காமல் மேற்கொண்டிருப்பது உளவுத்துறை கண்காணிக்க தவறியதோ? என்கிற கேள்வி எழுகிறது.

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களை வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சேவை மனப்பான்மையை வெளிப்படுத்தினாலும் பயணத்திற்கான செலவுகள் அனைத்தும் நண்பர்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறுகிறார்.

சூலூர் போன்ற விமான படை தளங்கள் அமைந்திருக்கும் பகுதியை கடந்து செல்வது மற்றும் வெடி மருந்து தொழில்சாலை அமைந்துள்ள அரவங்காடு, ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ள வெலிங்டன் பகுதியை கடந்து செல்ல போலீசாரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியம் இல்லையா?.

மேலும் சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் இலங்கையை சேர்ந்த பிரதாபனின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?. பயணத்தை மேற்கொள்ளும் பிரதாபன் அரசுத்துறை சார்ந்த அலுவலக வளாகங்களில் எவ்வாறு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்தினார் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு நாடு நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்வதில் உளவுத்துறையின் தீவிர கண்காணிப்பில் தான் உள்ளது. ஆனால் பிரதாபன் போன்ற வெளிநாட்டு பயணிகள் தமிழ்நாட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் போது அனுமதி பெற்று நடத்தினால் தான் அதன் பயன் பொதுமக்களை சென்றடையும்.

இந்நிலையில் பிரதாபனின் சைக்கிள் பயணத்தை உளவுத்துறை கண்காணித்து பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை உறுதி செய்து பயணம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. மேலும் ஜனாதிபதி நீலகிரி பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பு அவசியம் எனவும் கருதப்படுகிறது.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...