உடுமலை அருகே பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை அடுத்த பூளவாடி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்களின வாழ்வாதாரம் காத்திட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: உடுமலை அருகே கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கைளை வலியுறுத்தி நடைபெற்ற ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தில், 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



உடுமலை அடுத்துள்ள பூளவாடி ஊராட்சி பகுதியில் கைத்தறி நெசவாளர்கள் குடும்பங்களின வாழ்வாதாரம் காத்திட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது அவர்கள், கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை தடுக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி ரகங்களை கைத்தறிக்க என்று உறுதிப்படுத்த வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த கைத்தறி நெசவாளர்களின் ஓய்வூதியத்தை மாதம் 3000 ஆக உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பட்டு நூல் சரிகை முதலிய மூலப் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் இன்றி சீரான முறையில் ஒரே விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கைத்தறி நெசவாளர்களுக்கு இலவச தறி சாமான் உதிரி பாகங்கள் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு வங்கி ஏற்படுத்தி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் நிதியுதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 2007ல் இருந்து 2013ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்து வந்த கைத்தறி நெசவாளர்கள் நலன் காப்பீடு திட்ட மருத்துவ அட்டை மீண்டும் இலவசமாக கைத்தறி நெசவாளர்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும்.



இவ்வாறான கோரிக்கைகள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த போராட்டத்தில், பூளவாடி, வடுகபாளையம், வீதம்பட்டி, பெல்லம்பட்டி, கொள்ளுபாளையம், வி.வேலூர், ராமச்சந்திராபுரம் உட்பட பத்துக்கு மேற்பட்ட கிராமங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பெண்கள் ஆண்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...