மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த கோரி கோவையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த கோரியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் மணிப்பூர் மக்கள், பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் கோவை வாழ் மணிப்பூர் மக்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கோவையில் வசிக்கும் மணிப்பூர் மக்கள், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி நிலவ வலியுறுத்தியும், பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்தும் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் "Justice Delayed is Justice Denied, Hang Rapist, Our Future Not Safe in Manipur, Pray For Manipur Violence" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...