‘சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களும் நவீனப் பாடல்களே’ - கோவை புத்தக கண்காட்சியில் கவிஞர் இளம்பிறை உரை!

நவீனம் என்றால் வானத்தில் இருந்து குதித்த சொல்லாடல் இல்லை. மரபின் வேர்களைத் தாங்கி வருபவை. புதுமைகளைத் தாங்கி வருவது நவீனம். இந்த உத்தியைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதி தான் எனக்கூறிய கவிஞர் இளம்பிறை, அவர் தான் நவீன வசனக் கவிதையைத் தொடங்கி வைத்தார் என்றும் தெரிவித்தார்


கோவை: நவீன வசனக் கவிதையை தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதியார் தான் என கோவை புத்தக கண்காட்சியில் கவிஞர் இளம்பிறை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் ஆகிய இணைந்து நடத்தும், “7-வது புத்தகத் திருவிழா – 2023”, கோவை - அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகத்தில் நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், ஐந்தாம் நாளான நேற்று (25.07.2023) நடைபெற்ற “நவீனக் கவிதையும் இசையும்” என்ற சிறப்பு நிகழ்ச்சியில், கவிஞர் இளம்பிறை பேசியதாவது, நவீனம் என்றால் என்ன? பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அனைத்துக் கலை வடிவங்களிலும் மாற்றங்கள் எற்பட்டன. இலக்கியத்தில் புதிய ஒளிக் கீற்றுகள் தோன்றின.

நவீனம் என்றால் ஏதோ வானத்தில் இருந்து குதித்த சொல்லாடல் இல்லை. மரபின் வேர்களைத் தாங்கி வருபவை. புதுமைகளைத் தாங்கி வருவது நவீனம். இந்த உத்தியைத் தொடங்கி வைத்தவர் மகாகவி பாரதி. நவீன வசனக் கவிதையைத் தொடங்கி வைத்தார். அதற்காக மரபை எதிர்க்கவில்லை.

இப்படியும் எழுதலாம் என்ற புதிய பாதையை வகுத்துக் கொடுத்தவர். புதிய கதவைத் திறந்து வைத்தவர். இதன் வழியாக வந்த கவிஞர்கள் ஏராளம். மிகப்பெரிய சுதந்திரம் நவீனக் கவிதைகளில் இருந்தன.

நவீனத்தை காலம், கருத்தை அடிப்படையாக கொண்டு பார்க்க வேண்டும். சங்க இலக்கியங்களில் அகப்பாடல்களை நவீனமாகவே பார்க்கிறேன். இன்றும் சங்க இலக்கியங்களைப் பேசுகிறோம் என்றால், அதன் நீட்சி இன்றளவும் தொடர்கிறது.

நவீனம் என்பது ஹைக்கூ கவிதைகள், புதுக்கவிதைகளில் தான் இருக்க வேண்டும் என்றில்லை. அதை நாட்டுப்புறப் பாடல்களிலும் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



தொடர்ந்து திரைப்படக் கலைஞர் ரவி சுப்பிரமணியம் நவீனக் கவிதைகளுக்கு மெட்டமைத்துப் பாடினார். இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் வி.திருஞானம், கோவை புத்தகக் கண்காட்சித் தலைவர் கே.ரமேஷ் மற்றும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், வாசகர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...