திருப்பூர் மாவட்டத்தில் காவலர்கள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்படும் - மாவட்ட எஸ்.பி சாமிநாதன் உறுதி!

பல்லடம் பேருந்து நிலையத்தில் புற காவல் நிலையம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட எஸ்.பி சாமிநாதன், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்படும் என்றும், கிராமபுறங்களில் சிசிடிவி பயன்பாடு குறித்து அறிவுரை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காவலர்கள் பற்றாக்குறை விரைவில் தீர்க்கப்படும் என திருப்பூர் மாவட்ட எஸ்.பி சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குற்றச் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில், புறகாவல் நிலையங்கள் அமைக்கவும் பொது இடங்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.



இந்த நிலையில் பல்லடம் பேருந்து நிலையத்தில் புறகாவல் நிலையம் கட்டப்பட்டு வந்தது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது.



இங்கு சிசிடிவி கேமராக்களை பொருத்த திருப்பூரை சேர்ந்த அன்னை எண்டர்பிரைசர்ஸ் நிறுவனம் 65 ஆயிரம் நிதி உதவி வழங்கியது.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாமிநாதன் கலந்து கொண்டு புறகாவல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,



இந்த பல்லடம் புறகாவல் நிலையத்தில் 40 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் கண்காணிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

கிராமப்புறங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. காவலர்கள் பற்றாக்குறையை குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு விரைவில் காவலர்கள் பற்றாக்குறை விரைவாக தீர்க்கப்படும் என பதிலளித்தார்.



இந்நிகழ்ச்சியில் பல்லடம் துணை காவல் கண்காணிப்பாளர் சௌமியா, பல்லடம் காவல் ஆய்வாளர் மணிகண்டன் உள்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...