உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை - மாவட்ட ஆட்சியர் உறுதி!

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைக்கிராமத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் சாலை வசதி இல்லாததால், மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த நிலையில், இன்னும் 3 மாதத்தில் மலைக்கிராமங்களை இணைக்க சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: உடுமலை மலை கிராமங்களை இணைக்க 3 மாதத்தில் சாலை அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

உடுமலை வன குடியிருப்பு பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உடல்நலம் குன்றியதால் மலைவாழ் மக்கள் தொட்டில் கட்டி 5 கிலோ மீட்டர் தூரம் அவரை சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

உடுமலை வனப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்காக 5 கிலோ மீட்டர் சாலை அமைக்க கடந்த வாரம் உத்தரவாதம் அளிக்கப்பட்டு உள்ளது. சாலை அமைக்க டென்டர் கோரப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் சாலை வசதி செய்து தரப்படும். மேலும் இந்த பகுதி தவிர்த்து மற்ற மலை கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. உயிரிழந்த பழனிச்சாமி குறித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...