கோவை செம்மேடு அருகே மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறக்கக்கோரி பொதுமக்கள் மனு!

கோவை தொண்டாமுத்தூர் அருகேயுள்ள செம்மேடு பகுதியில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம் குழந்தைகள் எண்ணிக்கை குறைவு காரணமாக மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவதால், அங்கன்வாடி மையத்தை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் செம்மேடு அருகே மூடப்பட்ட அன்கன்வாடி மையத்தை மீண்டும் திறக்க கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட செம்மேடு கிராமத்தில் NGR வீதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மையம் தற்போது மூடப்பட்டு செயல்படாமல் உள்ளது.

இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்த நிலையில் தற்போது குழந்தைகள் எண்ணிக்கை குறைவு எனக் கூறி அங்கன்வாடி மையத்தை மூடியதாக தெரிகிறது. இதன் காரணமாக செம்மேடு கிராமத்தில் காந்தி காலனி, NGR வீதியில் உள்ள குழந்தைகள் இந்த வருடம் அங்கன்வாடி மையத்தில் சேர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் இப்பகுதியில் உள்ள தாய்மார்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் மூடப்பட்ட அங்கன்வாடி மையத்தை மறுபடியும் திறக்க வேண்டும் என கோரி அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி அங்கன்வாடி மையத்தை விரைவில் திறந்து குழந்தைகள், தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் பயனடைய உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...