கே.எப்.சி உரிமம் பெற்று தருவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் மோசடி - பீகாரை சேர்ந்த தந்தை, மகன் கைது!

கோவையை சேர்ந்த பெண்ணிடம் கே.எப்.சி நிறுவன கிளை உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் பணத்தை மோசடி செய்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தந்தை, மகனை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: கோவையை சேர்ந்த இளம்பெண்ணிடம் ஆன்லைன் மூலம் ரூ.14 லட்சம் மோசடி செய்த பீகாரை சேர்ந்த தந்தை, மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (22). பட்டதாரியான இவர் தனியாக தொழில் துவங்க ஆலோசனை மேற்கொண்டு வந்ததாக தெரிகிறது.

அப்போது இணைய தளத்தில் தேடிய போது, கே.எப்.சி நிறுவனத்தின் பெயரில் கடை நடத்தும் உரிமம் பெற்றுதருவதாக கூறி இணையதளம் மூலம் விளம்பரம் வந்துள்ளது. இதனை உண்மை என எண்ணிய அவர், அந்த உரிமம் பெற முயற்சி செய்துள்ளார்.

இந்த நிலையில், ஆன்லைன் மூலமே வெரிபிகேசன் செய்யப்படும் எனவும், உரிமம் பெற தேவையான தொகையை ஆன்லைன் மூலம் கட்டினால் உடனடியாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதை உண்மை என எண்ணிய பிரியதர்ஷினி ரூ.14 லட்சத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் செலுத்தி நீண்ட நாட்கள் ஆகியும் கே.எப்.சி நிறுவனம் நடத்த எந்த உரிமமும் வராததால், சந்தேகமடைந்த பெண் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இணையத்தை கண்காணித்து வந்த போது, பீகார் மாநிலத்தில் இருந்தவாறு மோசடி அரங்கேறியது தெரியவந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராம்பிரவேஸ் பிரசாத், சுராஜ்குமார் என்பதும் இருவரும் தந்தை மகன் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் குறித்து போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் வேறு மோசடி வழக்கில் இருவரும் சட்டீஸ்கர் மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சட்டீஸ்கர் விரைந்த போலீசார் சிறையில் இருந்த இருவரையும் கைது செய்து கோவை அழைத்து வந்தனர். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இவர்களுடன் மேலும் சிலர் சேர்ந்து இந்த மோசடியை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...