கருணாநிதி நூற்றாண்டு விழா - 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில், கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் திமுக சார்பில், 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மருத்துவ முகாம், பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.



இதேபோல், கோவை தேர் நிலைத்திடலில், கோவை மாநகர் மாவட்டம், பெரிய கடைவீதி பகுதி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.



இதில்., தையல் எந்திரம், சேலை, மிக்ஸி, ஐயன்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் 5 ஆயிரம் பேருக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நா.கார்த்திக் கூறியதாவது,



முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவையில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம், மிக்ஸி, கிரைண்டர், ஐயன்பாக்ஸ், சேலை என பயன் உள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் அனைத்து பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவோம்.

பாஜகவை சேர்ந்தவர்கள் வாய்க்கு வந்தபடி உளறி வருவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் உள்ளோம்.

பாஜகவினர், மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள், நாங்கள் அப்படி இல்லை. ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி மக்கள் பணி செய்வதோடு மட்டுமின்றி, மக்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...