மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தீவிரம் - கோவை ஆட்சியர் தகவல்!

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும், கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்வதற்கான கோரிக்கையை அரசிடம் தெரிவித்திருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.



கோவை: கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்கான கோரிக்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரி புத்தூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இதில் 93 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,



விவசாயிகள் பிரச்சனைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. பட்டு வளர்ச்சி திட்டங்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை புறநகர் பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளதால் பட்டு மானியத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர்களுக்கு செல்ல வேண்டும்.

ஒரே பயிரை விவசாய நிலங்களில் பயிரிடுவதன் மூலம் பூச்சி தொல்லைகள் மற்றும் அதனால் ஏற்படும் நில மாசுபாடு ஆகியவை அதிகரித்து வருகிறது. இதனால் மாற்றுப் பயிரை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்.

மகளிர் திட்டம் மற்றும் மாற்றி யோசி திட்டத்தின் மூலம் ஏராளமான நலத்திட்டங்கள் மகளிர்க்கு வழங்கப்பட்டு வருகிறது. கிசான் திட்டன் மூலம் பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து மகளிர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் வாங்குவதை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாய போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் அதற்கான தீர்வு எட்டப்படும்.

டெங்கு காய்ச்சல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது அதற்கான நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லோடு லாரிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிகமான வழக்குகள் இதனால் பதியப்பட்டு இருக்கிறது. விதிமீறல் இல்லாமல் இருக்கும் அளவிற்கு தொடர்ந்து அதிகாரிகள் அதனை பார்வையிட்டு வருகிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகைக்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக எங்கு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் தற்போது நடைபெற்று, பகுதி வாரியாக நடத்த தற்போது திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. அதற்கான பயோமெட்ரிக் மிஷின்கள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...