மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தீவிரம் - கோவை ஆட்சியர் தகவல்!

மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கான முதற்கட்ட ஆய்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றும், கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் விற்பனை செய்வதற்கான கோரிக்கையை அரசிடம் தெரிவித்திருப்பதாகவும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.



கோவை: கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்வதற்கான கோரிக்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் செஞ்சேரி புத்தூரில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.



இதில் 93 பயனாளிகளுக்கு ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது,



விவசாயிகள் பிரச்சனைகள் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. பட்டு வளர்ச்சி திட்டங்களுக்கு 6 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை புறநகர் பகுதிகளில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளதால் பட்டு மானியத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர்களுக்கு செல்ல வேண்டும்.

ஒரே பயிரை விவசாய நிலங்களில் பயிரிடுவதன் மூலம் பூச்சி தொல்லைகள் மற்றும் அதனால் ஏற்படும் நில மாசுபாடு ஆகியவை அதிகரித்து வருகிறது. இதனால் மாற்றுப் பயிரை பயிரிட விவசாயிகள் முன் வர வேண்டும்.

மகளிர் திட்டம் மற்றும் மாற்றி யோசி திட்டத்தின் மூலம் ஏராளமான நலத்திட்டங்கள் மகளிர்க்கு வழங்கப்பட்டு வருகிறது. கிசான் திட்டன் மூலம் பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இதனை அனைத்து மகளிர் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,



ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொப்பரை தேங்காய் வாங்குவதை ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாய போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது குறித்து அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது விரைவில் அதற்கான தீர்வு எட்டப்படும்.

டெங்கு காய்ச்சல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது அதற்கான நடவடிக்கைகள், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. கனிம வளங்கள் தொடர்பாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லோடு லாரிகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதிகமான வழக்குகள் இதனால் பதியப்பட்டு இருக்கிறது. விதிமீறல் இல்லாமல் இருக்கும் அளவிற்கு தொடர்ந்து அதிகாரிகள் அதனை பார்வையிட்டு வருகிறார்கள்.

மகளிர் உரிமைத்தொகைக்கான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக எங்கு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகள் தற்போது நடைபெற்று, பகுதி வாரியாக நடத்த தற்போது திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. அதற்கான பயோமெட்ரிக் மிஷின்கள் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Newsletter

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...