உடுமலையில் டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய இருவர் கைது!

உடுமலை அடுத்த தளி சாலையில், டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய தேனி வீரபாண்டியை சேர்ந்த மாரிமுத்து (28) மற்றும் மடத்துக்குளம் அடுத்த பாப்பான் குளத்தைச் சேர்ந்த வீரமுத்து(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த தளி சாலையில் டாஸ்மாக் ஊழியரை கத்தியை காட்டி மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (44). இவர் மொடக்குபட்டி - தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வருகிறார்.

கடந்த ஜூலை 1-ம் தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலையை முடித்துக் கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் சேல்ஸ்மேன் சரவணன் என்பவரை தனது பைக்கில் அழைத்துக் கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

வாகனம் தளி அருகே வந்தபோது, இவர்களது வாகனத்திற்கு பின்னால் வந்த கார், ஜெயப்பிரகாஷ் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. அதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது, அந்தக் காரில் முகக்கவசம் அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் மதுபானம் விற்ற பணத்தை கொடுங்கடா என்று பீர்பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், பையை எடுத்துச் சென்று வீசிவிட்டு சென்றனர்.

இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் தளி போலீசில் புகார் அளித்துள்ளார். அதைதொடர்ந்து உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் டாஸ்மாக் பணியாளரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற, தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மாரிமுத்து (28) மடத்துக்குளம் தாலுக்கா பாப்பான் குளத்தைச் சேர்ந்த வீரமுத்து(24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து நான்கு சக்கர வாகனம் ஒன்றும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...