உடுமலை அருகே பாம்பு கடித்து மலை கிராமப் பெண் காயம்!

உடுமலை அடுத்துள்ள குழிப்பட்டி என்ற மலை கிராமத்தில் பெண் ஒருவரை பாம்பு கடித்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் இயற்கையான முறையில் பசுமருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குழிப்பட்டி மலை கிராமத்தில் பெண்ணை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் மாரியம்மாள் என்ற பெண்ணை கட்டுவீரியன் பாம்பு நேற்று இரவு கடித்து விட்டது. இந்த நிலையில் பாம்பு கடித்த பெண்ணை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர பாதை இல்லை.



இதன் காரணமாக இயற்கையான முறையில் பசுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பகுதியில் ஒரு சில நேரங்களில் காட்டு யானைகள் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் குழிபட்டியில் இருந்து உடுமலைக்கு வர தற்பொழுது காடம்பாறை ஆழியாறு ஆனைமலை வழியாக வந்தால் சுமார் 3 மணி நேரம் ஆகிறது.

ஆனால் குழிப்பட்டியில் திருமூர்த்தி மலைக்கு வனப்பகுதியில் பாதை அமைத்து கொடுத்தால் ஏராளமான மலைவாழ் மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிப்பட்டி மாவடைப்பு உள்ளிட்ட மலை கிராமமக்கள் உடுமலைக்கு எளிதாக வர சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...