உடுமலை அருகே பாம்பு கடித்து மலை கிராமப் பெண் காயம்!

உடுமலை அடுத்துள்ள குழிப்பட்டி என்ற மலை கிராமத்தில் பெண் ஒருவரை பாம்பு கடித்த நிலையில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பாதை இல்லாததால் இயற்கையான முறையில் பசுமருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்ல பாதை அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: உடுமலை அருகே குழிப்பட்டி மலை கிராமத்தில் பெண்ணை பாம்பு கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகம் குழிப்பட்டி மலைவாழ் கிராமத்தில் மாரியம்மாள் என்ற பெண்ணை கட்டுவீரியன் பாம்பு நேற்று இரவு கடித்து விட்டது. இந்த நிலையில் பாம்பு கடித்த பெண்ணை உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வர பாதை இல்லை.



இதன் காரணமாக இயற்கையான முறையில் பசுமருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தப் பகுதியில் ஒரு சில நேரங்களில் காட்டு யானைகள் அட்டகாசமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் குழிபட்டியில் இருந்து உடுமலைக்கு வர தற்பொழுது காடம்பாறை ஆழியாறு ஆனைமலை வழியாக வந்தால் சுமார் 3 மணி நேரம் ஆகிறது.

ஆனால் குழிப்பட்டியில் திருமூர்த்தி மலைக்கு வனப்பகுதியில் பாதை அமைத்து கொடுத்தால் ஏராளமான மலைவாழ் மக்கள் உயிர்கள் காப்பாற்றப்படும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழிப்பட்டி மாவடைப்பு உள்ளிட்ட மலை கிராமமக்கள் உடுமலைக்கு எளிதாக வர சாலை வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...