நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லடத்தில் கைத்தறி நெசவாளர்கள் பேரணி!

கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க, நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு கோரிக்கை மனுக்களை அனுப்பி நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் பேரணியில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன் பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவாங்கர் சமுதாய மக்கள் கைத்தறி நெசவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கைத்தறி மூல பொருளாக கருதப்படும் பட்டு நூல், பருத்தி நூல் ஆகியவற்றின் விலையானது கடுமையாக உயர்ந்து நிரந்தரமான விலை இல்லாததால் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.



இதையடுத்து காமநாயக்கன் பாளையம் சவுண்டம்மன் கோவிலின் முன்பு திரண்ட நூற்றுக்கணக்கான கைத்தறி நெசவாளர்கள் பேரணியாக அங்குள்ள தபால் நிலையம் நோக்கி சென்றனர்.



பட்டு மற்றும் பருத்தி நூல்களுக்கான விலையை நிர்ணயம் செய்யக்கோரியும், குறியீடு போடப்பட்ட கைத்தறி துணி வகைகளை கைத்தறியிலேயே நெசவு செய்ய அரசாணை இருக்கும் நிலையில் அதனை செயல்படுத்த தமிழக முதல்வரை வலியுறுத்தியும், 250 க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் தங்களது கோரிக்கை மனுக்களை தமிழக முதல்வருக்கு தபால் மூலம் அனுப்பி வைத்து நூதன கவன ஈர்ப்பு போராட்டதில் ஈடுபட்டனர்.



இந்த நூதன போராட்டத்தில் சூலூர் தொகுதி அதிமுக எம் எல் ஏ கந்தசாமியும் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் தேவாங்கர் சங்க தலைவர் சண்முகம், கே கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற துணை தலைவர் படையப்பா மூர்த்தி மற்றும் 200க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...